எதிர்கட்சி தலைவராக ராகுலின் முதல் உரையே லோக்சபாவில் புயலை கிளப்பியது.
அவர் பேசும் போதே மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்துக்கள் பற்றிய அவர் பேசிய கருத்து, சிறுபான்மையினர், அக்னிபாத், தொழில் அதிபர்கள் அம்பானி, அதானி பற்றி பேசிய கருத்துகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
சபாநாயகர் ஓம்பிர்லாவின் இந்த நடவடிக்கைக்கு ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓம் பிர்லாவுக்கு ராகுல் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது:
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நான் பேசினேன். அதில் பல கருத்துக்களை நீக்கி இருக்கிறீர்கள்#Rahul #letter #Om #Birla #Anurag #loksabha